பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி

பிஹார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் கட்சி தோல்வி
Updated on
1 min read

பாட்னா: தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், பிஹாரில் ஜன் சுராஜ் என்ற கட்சியை தொடங்கினார். பிஹாரில் 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் இவரது கட்சியினர் போட்டியிட்டனர். எனினும் 4 வேட்பாளர்களும் தோல்வி அடைந்தனர். இவர்களில் 3 பேர் டெபாசிட் இழந்தனர்.தேர்தல் முடிவுகளுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரசாந்த் கிஷோர் கூறுகையில், “பிஹார் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளது.

இங்கு பாஜக கூட்டணி நீண்ட காலமாக ஆட்சியில் இருந்தாலும் இதனை முடிவுக்கு கொண்டுவரவில்லை. என்றாலும் இங்கு பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பது கவலை அளிக்கிறது. இத்தேர்தலில் பதிவான மொத்த வாக்குகளில் 10 சதவீத வாக்குகளை எங்கள் கட்சி பெற்றுள்ளது. 3 தொகுதிகளில் ஆர்ஜேடி தோல்விக்கு இது காரண மாக இருந்ததாக கூறுவதை ஏற்க முடியாது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in