370-வது பிரிவு குறித்த கார்கே கருத்து: தேசிய மாநாடு கட்சிக்கு மெகபூபா கேள்வி

370-வது பிரிவு குறித்த கார்கே கருத்து: தேசிய மாநாடு கட்சிக்கு மெகபூபா கேள்வி
Updated on
1 min read

ஸ்ரீநகர்: மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தேசிய மாநாடு கட்சியின் உமர் அப்துல்லா தலைமையிலான அரசு, ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு அதில் கண்டனம் தெரிவிக்கப்படவில்லை. இந்த தீர்மானம் மாநில அந்தஸ்துக்கானது, 370-வது பிரிவுக்கானது அல்ல என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் 370-வது பிரிவை மீட்டெடுப்பது குறித்து காங்கிரஸ் ஒருபோதும் பேசவில்லை என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜு கார்கே கூறியுள்ளார். இது மக்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுகுறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு மெகபூபா முப்தி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in