Published : 16 Jun 2018 09:10 AM
Last Updated : 16 Jun 2018 09:10 AM

சிகிச்சை முடிந்து திரும்பிய மறுநாளே பணிகளை தொடங்கினார் பாரிக்கர்

கணைய புற்றுநோய் சிகிச்சைக்காக கோவா முதல்வர் மனோகர் பாரிர்க்க 3 மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா சென்றார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இந்தியா திரும்பினார்.

நேற்று காலையில் அவர் கண்டோலா தேவகி கிருஷ்ணர் மற்றும் மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அதைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்துக்குச் சென்று அலுவலகப் பணிகளில் ஈடுபட்டார்.

பின்னர் அவர் மூத்த அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் தலைமைச் செயலர் தர்மேந்திர சர்மா, போலீஸ் டிஜிபி முக்தேஷ் சந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இத்தகவலை முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து கோவா மக்களுக்காக முதல்வர் மனோகர் பாரிக்கர் பேசும் அரை நிமிட வீடியோவும் வெளியிடப்பட்டது.

அதில் அவர் கூறியுள்ளதாவது: கோவா மாநில மக்களின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன். மக்கள் சேவையைத் தொடர்வேன். நான் நலம் பெறவேண்டி எனக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x