பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு ரூ.25 லட்சம், கார், வீடு, துபாய் பயணம்: விசாரணையில் குற்றவாளிகள் வாக்குமூலம்

பாபா சித்திக்கை கொலை செய்வதற்கு ரூ.25 லட்சம், கார், வீடு, துபாய் பயணம்: விசாரணையில் குற்றவாளிகள் வாக்குமூலம்
Updated on
1 min read

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான பாபா சித்திக்கை கடந்த அக்டோபர் மாதம் 12-ம் தேதி 3 பேர் சுட்டுக் கொன்றனர்.

இதுதொடர்பாக இதுவரை 18 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் பஞ்சாப், உ.பி., புனேவை சேர்ந்தவர்கள். அவர்களில் 14 பேர் சிறையில் உள்ளனர். மற்ற 4 பேர் போலீஸ் காவலில் விசாரணையில் உள்ளனர். இந்நிலையில், புனேவைச் சேர்ந்த ஆதித்ய குலாங்கர் (22), ரபீக் ஷேக் (22) ஆகிய 2 பேரை போலீஸார் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: சித்திக்கை கொலை செய்ய ரூபேஷ் மொகோல் (22), சிவம் கோகெட் (20), கரண் சால்வே (19), கவுரவ் அபுனே (23) ஆகிய 4 பேருக்கும் தலா ரூ.25 லட்சம், கார், வீடு தருவதாகவும், துபாய் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்வதாகவும் ராம்பூல்சந்த் கனோஜியா (43) என்பவர் உறுதி அளித்துள்ளார். இந்த தகவலை 4 பேரும் விசாரணையில் கூறினர்.

மேலும், பஞ்சாபின் ஜலந்தரை சேர்ந்த ஜீசன் அக்தர் (23) என்ற இளைஞரிடம் இருந்துதான் கனோஜியா பணத்தை பெறுவார் என்று கூறினர். இதையடுத்து கனோஜியா மற்றும் ஜீசன் அக்தரையும் கைது செய்துள்ளோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in