வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்

வயநாட்டில் ராகுல், பிரியங்கா இன்று பிரச்சாரம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கடந்த மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு, உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டார். இரு தொகுதிகளிலும் அவர் வெற்றி பெற்றார்.

இறுதியில் வயநாடு தொகுதி எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்தார். அந்த தொகுதிக்கு வரும் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ராகுல் காந்தியின் தங்கையும் காங்கிரஸ் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்திவயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார்.

கடந்த மாதம் 23-ம் தேதி பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் தீவிர பிரச்சாரம் செய்தார். அப்போது அவருக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் பிரச்சாரத்தில் பங்கேற்றார். இந்த சூழலில் பிரியங்காவும் ராகுலும் இன்று மீண்டும் வயநாட்டில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். இன்று காலை 11 மணிக்கு மானந்தவாடி நகரில் காந்தி பூங்காவில் இருவரும் இணைந்து பிரச்சாரம் செய்ய உள்ளனர். பிற்பகல் 1 மணிக்கு மானந்த வாடி வாலாட் பகுதியில் பிரியங்கா பிரச்சாரம் செய்ய உள்ளார்.மாலை 3 மணிக்கு அரிக்கோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in