Published : 15 Jun 2018 08:43 AM
Last Updated : 15 Jun 2018 08:43 AM

அமர்நாத் செல்லும் வாகனங்களை அறிய ஆர்எப்ஐடி சாதனம்

தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் செல்வது வழக்கம். வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 26 வரை இந்த யாத்திரை நடக்கிறது. இதுகுறித்து சிஆர்பிஎப் கமாண்டன்ட் ஆஷிஷ் குமார் ஜா நேற்று கூறும்போது, “அமர்நாத் யாத்ரீகர்கள் செல்லும் வாகனங்களில் வானொலி அலைவரிசை அடையாள சாதனம் (ஆர்எப்ஐடி) பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரு வாகனம் எந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கிறது என்பதை பாதுகாப்புப் படையினர் அறிய முடியும். வாகனம் பழுதாகி நின்றாலோ அல்லது யாத்ரீகர்களுக்கு தேவைப்படும் உதவியைச் செய்யவோ இது உதவும்” என்றார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x