Published : 01 Jun 2018 10:19 AM
Last Updated : 01 Jun 2018 10:19 AM

அரசு பங்களாக்களை காலி செய்யும் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங்

உத்தரபிரதேச முதல்வராக இருந்தபோது தங்களுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாக்களை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், அவரது தந்தை முலாயம் சிங் ஆகியோர் காலி செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர்களாக பதவி வகித்த முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு அந்தந்த காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்யவில்லை. இது தொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் அனைவரையும் உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது. அதன்படி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, தனது அரசு பங்களாவை நேற்று முன்தினம் காலி செய்தார்.

இந்நிலையில், லக்னோவில் உள்ள தங்கள் அரசு பங்களாக்களை அகிலேஷ் யாதவும், முலாயம் சிங்கும் நேற்று காலி செய்யத் தொடங்கியுள்ளனர். ஓரிரு தினங்களில் அவர்கள் அரசு பங்களாக்களை முழுமையாக காலி செய்துவிடுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x