சாலை விபத்துகளில் தினமும் 474 பேர் உயிரிழப்பு: நாடு முழுவதும் 4.63 லட்சம் பேர் காயம்

சாலை விபத்துகளில் தினமும் 474 பேர் உயிரிழப்பு: நாடு முழுவதும் 4.63 லட்சம் பேர் காயம்
Updated on
1 min read

புதுடெல்லி: நாடு முழுவதும் ஏற்படும் விபத்துகள் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அனுப்பி வைக்கின்றன. அதன்படி கடந்த 2023-ம் ஆண்டு 1.7 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி பார்த்தால் 3 நிமிடங்களுக்கு ஒருவரும் அல்லது ஒரு நாளைக்கு சராசரியாக 474 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தேசிய அளவில் ஏற்படும் விபத்துகள், எதனால் ஏற்படுகின்றன, எந்தெந்த வகைகளில் விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை அறிய மத்திய அரசு தகவல்கள் திரட்ட தொடங்கியது. அதன் அடிப்படையில் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள், செயல் திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. எனினும், கடந்த ஆண்டு சாலை விபத்துகள் அதிகமாக நடைபெற்றுள்ளன. விபத்துகளில் உயிரிழப்போர் மட்டுமன்றி படுகாயம் அடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு மட்டும் விபத்துகளில் 4.63 லட்சம் பேர் விபத்துகளில் காயம் அடைந்துள்ளனர். இது கடந்த 2022-ம்ஆண்டு ஏற்பட்ட காயங்களின் எண்ணிக்கை விட 4 சதவீதம் அதிகம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in