Published : 17 Jun 2018 09:51 AM
Last Updated : 17 Jun 2018 09:51 AM

தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு: மத்திய அரசு மீது ஆர்டிஐ ஆர்வலர் புகார்

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

ஆர்டிஐ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற செய்திகள் வெளியாகி வந்தன. இதுதொடர்பான தகவலைக் கேட்டு ஆர்வலர் அஞ்சலி பரத்வாஜ் என்பவர் ஆர்டிஐ சட்டம் மூலம் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையில் விண்ணப்பித்தார்.

இதற்கு பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அளித்த பதிலில், ‘‘ஆர்டிஐ சட்டம், 2005-ல் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறுதிக் கட்டத்தை அடையவில்லை. எனவே ஆர்டிஐ சட்டத்தின் 8-வது ஷரத்தின்படி நீங்கள் கேட்ட தகவலை தற்போது தர இயலாது’’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து அஞ்சலி கூறியதாவது: ஆர்டிஐ சட்டத் திருத்தம் குறித்து மக்களிடம் தெரிவிக்க மத்திய அரசு விரும்பவில்லை என்று தெரிகிறது. விவாதம், ஆலோசனையின்றி சட்டத் திருத்தம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. ஊழலை வெளிக்கொண்டு வருபவர்கள் பாதுகாப்பு திருத்த மசோதா கொண்டு வந்தபோதும் மத்திய அரசு அதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆர்டிஐ மூலம் அளித்த விண்ணப்பத்துக்கு பதிலையும் தெரிவிக்கவில்லை. தற்போது ஆர்டிஐ சட்ட திருத்தம் குறித்தும் தெரியவந்து, அதுதொடர்பான தகவல்களை அளிக்குமாறு கேட்டோம். ஆனால் இப்போதும் எங்களுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். - ஐஏஎன்எஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x