Published : 25 Jun 2018 07:59 AM
Last Updated : 25 Jun 2018 07:59 AM

காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட 2 லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மற்றொருவர் சரணடைந்தார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வரும் 28-ம் தேதி அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் புனித யாத்திரை தொடங்க உள்ளது. இதையடுத்து, தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்துக்குட்பட்ட ஒரு கிராமத்தின் வழியாக செல்லும் நெடுஞ்சாலையில், காஷ்மீர் போலீஸார், ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் அடங்கிய பாதுகாப்புப் படையினர் நேற்று பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் சரணடைந்தார். இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. சரணடைந்தவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x