Published : 18 Jun 2018 09:15 AM
Last Updated : 18 Jun 2018 09:15 AM

தேர்தலில் மதத்தைத் தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை: பாஜக தலைவர் பொது நலன் வழக்கு

தேர்தல் லாபத்துக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் டெல்லியைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது: தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், தேர்தல் லாபத்துக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. இதனால் நாட்டின் மதச்சார்பின்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு பாதிப்புகள் ஏற்புடுகின்றன.

அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி தேர்தல் லாபத்துக்காக மதத்தைப் பயன்படுத்துவது, ஜனநாயகம் மற்றும் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது ஆகும். எனவே நீதித்துறை இதில் தலையிட்டு முற்றுப் புள்ளியை வைக்கவேண்டும்.

அரசியல் லாபத்துக்காக மதத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க போதிய உத்தரவுகளை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x