Published : 09 Jun 2018 03:56 PM
Last Updated : 09 Jun 2018 03:56 PM
ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் உமர் காலித் வெள்ளிக்கிழமையன்று போலீஸாரிடம் பதிவு செய்த புகாரில் தன்னை தலைமறைவு தாதா என்று அழைத்துக் கொள்ளும் ரவி புஜாரி என்பவனிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகப் பதிவு செய்துள்ளார்.
நேற்று, குஜராத் தலித் எம்.எல்.ஏ. ஜிக்னேஷ் மேவானி இதே புஜாரியிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகப் புகார் அளித்ததும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து போலீஸா விசாரணை நடத்தி வருகின்றனர்.
உமர் காலித் தன் ட்விட்டரில் இது பற்றி கூறியபோது போலீஸ் பாதுகாப்புத் தேவை என்றும் ஜிக்னேஷ் மற்றும் நான் புஜாரியின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறேன், இதே நபர்தான் 2016 பிப்ரவரியிலும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றார்.
2016-ல் உமர் காலித்தின் தந்தை சையத் காசிம் இலியாஸ் ரஸூல் கொலை மிரட்டல் தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதாவது உமர் காலித் நாட்டை விட்டு வெளியேறவில்லை எனில் கொல்லப்படுவார் என்று புஜாரி மிரட்டியதாக புகார் பதிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT