Published : 04 Jun 2018 06:53 AM
Last Updated : 04 Jun 2018 06:53 AM
உத்தர பிரதேச பாஜக எம்.பி. ஒருவரும் எம்எல்ஏ ஒருவரும் தனித்தனியே போராட்டம் அறிவித்துள்ளனர்.
உ.பி.யின் சலேம்பூர் எம்.பி. ரவீந்திரா குஷ்வாஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட பெல்தெரா ரோட் மற்றும் சலேம்பூர் ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்க வலியுறுத்தி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல, பைரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தனது தொகுதியின் தாலுகா அலுவலகத்தில் ஊழலை எதிர்த்து வரும் 5-ம் தேதி போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார். ஆளும்கட்சியான பாஜகவைச் சேர்ந்த எம்பி, எம்எல்ஏக்களே போராட்டம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT