Published : 08 Jun 2018 08:19 AM
Last Updated : 08 Jun 2018 08:19 AM
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள சன்ட்வாட் என்ற இடம் அருகே சொக்ராஸ் படா என்ற இடத்தில் நேற்று காலை 5.30 மணியளவில் நின்று கொண்டிருந்த லாரி மீது அந்த வழியே வந்த மினி பஸ் ஒன்று மோதியது. இதில் 10 பேர் இறந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
லாரி டயர் பஞ்சரானதால் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது. பஸ்ஸில் இருந்தவர்கள் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் புனித தலங்களுக்கு சென்று விட்டு மகாராஷ்டிராவில் உள்ள கல்யாண் என்ற இடத்துக்கு திரும்பும்போது விபத்து ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT