Published : 07 Jun 2018 10:22 AM
Last Updated : 07 Jun 2018 10:22 AM
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சி பாஜகவையும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசையும் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கு முன்னதாக தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த பாஜக தலைவர் அமித் ஷா முயற்சி மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயை மும்பையில் உள்ள அவரது வீட்டில் அமித் ஷா நேற்று சந்தித்துப் பேசினார். மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் அப்போது உடன் இருந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிவசேனா கட்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் சிவசேனா கூட்டணி தொடர வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரேயிடம் அமித் ஷா வலியுறுத்தியதாக தெரிகிறது. முன்னதாக நேற்று காலை வெளியான சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் இனிவரும் தேர்தல்களில் சிவசேனா கட்சி தனித்துப் போட்டியிடும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT