Published : 07 Jun 2018 08:56 AM
Last Updated : 07 Jun 2018 08:56 AM

கிராம அஞ்சலக ஊழியர்கள் சம்பளம் உயர்வு

மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இக்கூட்டத்துக்குப் பின் தொலைதொடர்பு அமைச்சர் மனோஜ் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

கிராம அஞ்சலக ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி, மாதம் ரூ.2,295 சம்பளம் பெறும் ஊழியர் ரூ.10 ஆயிரமும், ரூ.2,775 பெறும் ஊழியர் இனி மாதம் ரூ.12,500-ம் பெறுவார்கள். மாதம் ரூ.4,115 சம்பளம் பெறுவோருக்கு இனி ரூ.14,500 சம்பளம் வழங்கப் படும். இந்த ஊதியம் 2016 ஜனவரி 1-ம் தேதி முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும். ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் உள்ள 2.6 லட்சம் கிராம அஞ்சலக ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x