Published : 18 Jun 2018 09:16 AM
Last Updated : 18 Jun 2018 09:16 AM

4 நாடுகள் சுற்றுப்பயணம்தொடங்கினார் சுஷ்மா ஸ்வராஜ்

நான்கு நாடுகள் சுற்றுப்பயணத்தை நேற்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொடங்கினார்.

இத்தாலி, பிரான்ஸ், லக்சம்பர்க், பெல்ஜியம் ஆகிய நாடுகளில் அவர் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். இதற்கான பயணம் நேற்று தொடங்கியது. நேற்று அவர் டெல்லியிலிருந்து முதலில் இத்தாலி சென்றார். இத்தாலியில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள கியுசெப்பே கோன்டேவை ரோம் நகரில் அவர் சந்தித்துப் பேசுகிறார்.

அப்போது அவர் இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் என்சோ மோவெரோ மிலனேசியையும் சந்தித்துப் பேசுகிறார்.

இதைத் தொடர்ந்து இன்று சுஷ்மா, பிரான்ஸ் செல்லவுள்ளார். அப்போது அவர் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் எவெஸ் லே டிரியனைச் சந்தித்துப் பேசவுள்ளார்.

அப்போது பாரிஸ் நகரிலுள்ள இந்திய கலாசார மையத் தொடக்க விழாவில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும் அங்கு வசித்து வரும் இந்தியர்களுடன் அவர் கலந்து பேசவுள்ளார்.

இதைத் தொடர்ந்து 19-ம் தேதி லக்சம்பர்க் புறப்பட்டுச் செல்லும் சுஷ்மா, லக்சம்பர்க் அரசர் ஹென்றி ஆல்பர்ட் கேப்ரியேல் பெலிக்ஸ் மேரி குய்லாம், பிரதமர் சேவியல் பெட்டல் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். இதைத் தொடர்ந்து பெல்ஜியத்துக்கு 20-ம் தேதி செல்லும் சுஷ்மா ஸ்வராஜ் அங்கு பெல்ஜியத்தின் துணைப் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேசவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x