Published : 12 Aug 2014 10:00 AM
Last Updated : 12 Aug 2014 10:00 AM
தங்கம் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும் என்று மத்திய வர்த்தக, தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி:
தங்கம் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக நகைத் தொழில், வைர வியாபாரம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். நாட்டின் ஏற்றுமதியில் வைரம், தங்க நகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தங்கத்துக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதால் அத்துறை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்படுவதோடு மட்டுமன்றி கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. மத்திய நிதியமைச்சர் தங்கம் மீதான கட்டுப்பாடுகளை விரைவில் நீக்குவார் என்று நம்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT