Published : 02 Aug 2014 12:00 AM
Last Updated : 02 Aug 2014 12:00 AM

மக்களவையில் 2-வது வரிசையில் சோனியா

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவையில் வெள்ளிக்கிழமை சிறிது நேரம் 2-வது வரிசையில் அமர்ந்திருந்தார்.

சோனியா காந்தி அவைக்கு வரும்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள உறுப்பினர் பப்பு யாதவ், காங்கிரஸ் உறுப்பினர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் எதிர்க்கட்சி பகுதியில் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சோனியாவை கண்டவுடன் அவர் அமர்வதற்காக இருவரும் தங்கள் இருக்கையை விட்டு எழுந்தனர். என்றாலும் சோனியா காந்தி 2-வது வரிசையில் அமர்ந்தார்.

ஆர்.ஜே.டி. உறுப்பினர் பப்பு யாதவ் செய்தித்தாள் போன்ற காகித அட்டை ஒன்றை சோனியாவிடம் காண்பிக்க முயன்றார். ஆனால் அதை பார்ப்பதை தவிர்த்தார் சோனியா. பிறகு திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகதா ராயிடம் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.- பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x