Published : 20 May 2018 08:49 AM
Last Updated : 20 May 2018 08:49 AM

ஜம்மு-காஷ்மீருக்கு மோடி வருகை: இன்டர்நெட் சேவை ரத்து; பள்ளிகளுக்கு விடுமுறை

பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு-காஷ்மீருக்கு நேற்று வந்ததையொட்டி பாதுகாப்பு காரணங்களால் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது.

ரம்ஜான் மாத நோன்பையொட்டி பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ராணுவ நடவடிக்கைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி நேற்று ஜம்மு-காஷ்மீர் சென்று பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக மாநிலம் முழுவதும் இன்டர்நெட் சேவையை அரசு நிறுத்தி வைத்தது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் மக்கள் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பிரதமர் மோடி கலந்துகொண்ட நிகழ்ச்சி ஸ்ரீநகரிலுள்ள ஷெர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்தப் பகுதி முழுவதும் ராணுவ வீரர்கள், போலீஸார் குவிக்கப்பட்டனர். மொத்தம் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

முழு அடைப்பு

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி நேற்று முழு அடைப்புக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்திருந்தனர். பேரணி நடத்துவதற்கும் அவர்கள் அனுமதி கேட்டிருந்தனர். ஆனால் போலீஸார், காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை வீட்டுச் சிறைகளில் வைக்க முடிவு செய்தனர். மேலும் பேரணிக்கும் அனுமதி வழங்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x