Published : 19 May 2018 08:06 AM
Last Updated : 19 May 2018 08:06 AM

அரசு பங்களாவை காலி செய்ய உபி முன்னாள் முதல்வர்கள் 6 பேருக்கு நோட்டீஸ்

அரசு பங்களாக்களை 15 நாட்களுக்குள் காலி செய்ய முலாயம் சிங், மாயாவதி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 6 முன்னாள் முதல்வர்களுக்கு உத்தர பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உபியில் கடந்த அகிலேஷ் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களில் தொடர்ந்து குடியிருக்க வகைசெய்யும் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் பதவி வகிப்பவர்கள் பதவிக்காலம் முடிந்ததும் அவர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்று கூறி உபி அரசின் உத்தரவை ரத்து செய்தது.

இதையடுத்து, அரசு பங்களாவில் தொடர்ந்து குடியிருக்கும் முன்னாள் முதல்வர்கள் என்.டி.திவாரி, முலாயம் சிங் யாதவ், கல்யாண் சிங், மாயாவதி, ராஜ்நாத் சிங், அகிலேஷ் சிங் ஆகிய 6 பேருக்கு, 15 நாட்களுக்குள் பங்களாவை காலி செய்யுமாறு உபி அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x