Published : 01 May 2018 09:06 AM
Last Updated : 01 May 2018 09:06 AM

தேவஸ்தான அறங்காவலர் பதவியேற்பு

திருமலை தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுவினர், புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்மையில் பதவியேற்றுக் கொண்டனர். 14 பேரில் 12 பேர் பதவி பிரமாணம் செய்த நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த இன்போசிஸ் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சுதா நாராயண மூர்த்தி, புதிய அறங்காவலராக நேற்று பதவியேற்றார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்பு தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இப்பதவி மூலம் சாமானிய பக்தர்களுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்துள்ளது. இதற்காக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x