Published : 27 May 2018 04:43 AM
Last Updated : 27 May 2018 04:43 AM
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கற்பனை கூட்டணி களமிறங்குகிறது. இந்த கூட்டணி நிலைக்காது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்ப தாவது:
வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸும் பிராந்திய கட்சிகளும் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இது வெறும் கற்பனை கூட்டணி. இந்த கூட்டணி நிலைக்காது.
திமுக, திரிணமூல் காங்கிரஸ் தெலுங்கு தேசம், பகுஜன் சமாஜ், மதச்சார்பற்ற ஜனதா ஆகிய கட்சிகள் பாஜக கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றிருந்தன. அப்போது அந்த கட்சிகளின் தலைவர்கள் கூறியபோது, தேசிய நலனை கருத்தில் கொண்ட கட்சி என்பதால் பாஜகவுடன் கூட்டணி அமைத்தோம் என்று தெரிவித்தனர். அதே கட்சிகள் தற்போது மதச்சார்பின்மை என்ற பெயரில் பாஜகவை எதிர்க்கின்றன. பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அடிக்கடி கொள்கைகளை மாற்றிக் கொள்வார்கள். அவர்களில் சிலர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். ஏற்கெனவே முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், சந்திர சேகர் ஆட்சி காலத்தில் இதுபோன்ற கூட்டணி கள் உருவாக்கப்பட்டன. ஆனால் அந்த கூட்டணி நிலைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT