Published : 09 May 2018 07:13 AM
Last Updated : 09 May 2018 07:13 AM

காஷ்மீரில் முழு அடைப்பு நிறுத்தி வைப்பு

காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டத்தை நிறுத்தி வைப்பதாகவும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்றும் பிரிவினைவாதிகள் நேற்று அறிவித்தனர்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால் பொதுமக்கள் கொல்லப்படுவதை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் முழு அடைப்பு போராட்டத்துக்கு பிரிவினைவாதிகள் அழைப்பு விடுத்து வந்தனர்.

சையது அலிஷா கிலானி, மிர்வைஸ் உமர் பரூக், முகம்மது யாசின் மாலிக் ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட ஜேஆர்எல் (எதிர்ப்புக்கான கூட்டுத் தலைமை) இந்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. இந்தப் போராட்டத்தை ஜேஆர்எல் நேற்று நிறுத்திக் கொண்டது. என்றாலும் மக்கள் தங்கள் வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றியும் கைகளில் கறுப்பு பட்டை அணிந்தும், அமைதிப் பேரணி நடத்தியும் எதிர்ப்பை தெரிவிக்கலாம் என்று ஜேஆர்எல் கூறியுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x