Published : 20 May 2018 08:49 AM
Last Updated : 20 May 2018 08:49 AM

பிரிவினைவாத தலைவர் பரூக் காஷ்மீரில் கைது

பிரதமர் நரேந்திர மோடி நேற்று காஷ்மீருக்கு வந்தார். அவர் வரும் போது, காஷ்மீர் மக்கள் அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள லால் சவுக் சிட்டி சென்ட்டர் பகுதியில் திரள வேண்டும். காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று பிரிவினைவாத தலைவர்கள் முன்னதாக அழைப்பு விடுத்திருந்தனர்.

அதன்படி, ஏற்கெனவே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹுரியத் மாநாட்டு அமைப்பின் மிதவாத தலைவர் மிர்வெய்ஸ் உமர் பரூக், நேற்று தனது இல்லத்தில் இருந்து லால் சவுக் சிட்டி சென்ட்டருக்கு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக செல்ல முயன்றார். அப்போது பாதுகாவலர்கள் அவரை கைது செய்து நைகீன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x