Published : 07 Jul 2024 06:38 AM
Last Updated : 07 Jul 2024 06:38 AM

காங்கிரஸில் இணைந்த பிஆர்எஸ் எம்எல்ஏ

ஹைதராபாத்: தெலங்கானாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.

தொடர்ந்து 2 முறை ஆட்சியில் இருந்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி தோல்வி அடைந்தது. இந்நிலையில், பிஆர்எஸ் கட்சியின் 6 எம்எல்ஏக்கள் ஏற்கெனவே காங்கிரஸில் இணைந்தனர். இந்நிலையில், கத்வாலா பிஆர் எஸ் கட்சி எம்எல்ஏவான கிருஷ்ண மோகன் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x