Published : 16 May 2018 08:18 AM
Last Updated : 16 May 2018 08:18 AM
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை மக்கள் நிராகரித்தபோதிலும், அக்கட்சிக்கு பதவி ஆசை விடவில்லை என்று அம்மாநில பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை மக்கள் நிராகரித்துவிட்டனர். காங்கிரஸ் இல்லாத கர்நாடகாவை உருவாக்குவதில் மக்கள் தெளிவாக இருக்கின்றனர். ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸின் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தி வெளிப்படையாக தெரிகிறது. தல்வர் சித்தராமையா போட்டியிட்ட சாமுண்டீஸ்வரி தொகுதியிலேயே அவர் தோல்வியை தழுவி இருக்கிறார்.
இவ்வாறு, மக்கள் தங்களை நிராகரித்துள்ளது தெளிவாக தெரிந்திருந்தும், காங்கிரஸுக்கு பதவி ஆசை விடவில்லை. அதன் காரணமாகவே, மஜதவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சியமைக்க தீவிரமாக முயற்சித்து வருகிறது. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT