Published : 27 May 2018 09:47 AM
Last Updated : 27 May 2018 09:47 AM
ராஜஸ்தானில் கடந்த 2011-ல் செவிலியர் பன்வாரி தேவி கடத்தப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேருக்கு ஜோத்பூர் நீதிமன்றம் நேற்று 3 நாள் இடைக்கால ஜாமீன் வழங் கியது.
மல்கான் சிங் பிஷ்னோய், பரசுராம் பிஷ்னோய், இவர்களின் சகோதரி இந்திரா பிஷ்னோய் ஆகிய மூவரும் ஜோத்பூர் அருகில் உள்ள தங்கள் சொந்த ஊரில் உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இந்த ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் காலம் நாளை முடிகிறது.நாளை மாலை சிறை திரும்ப வேண்டும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
கடந்த 2011-ல் நிகழ்ந்த பன்வாரி தேவி கொலையில் அப்போதைய ராஜஸ்தான் அமைச்சர் மகிபால் மதர்னாவின் பெயர் வெளியானதை தொடர்ந்து இந்த வழக்கு முக்கியத்துவம் பெற்றது.
ஜாலிவாடா என்ற கிராமத்தில் அரசு சுகாதார மையத்தில் செவிலியராக பன்வாரி பணியாற்றினார். அமைச்சர் மகிபாலுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ சிடி வெளியானதை தொடர்ந்து அவர் கொலை செய்யப்பட்டார். ஜோத்பூரின் பிலாராவில் பன்வாரியை கடத்தி கொன்று அவரது உடல் மற்றொரு கும்பலிடம் தரப்பட்டுள்ளது.
அந்தக் கும்பல் பன்வாரி தேவியின் உடலை குவாரியில் எரித்து எஞ்சிய உடல் பாகங்களை கால்வாயில் வீசியுள்ளது என்று சிபிஐ கூறுகிறது.
இந்த வழக்கில் மகிபால் மதர்னா, பரசுராம் பிஷ்னோய், மல்கான் சிங் ஆகிய மூவரும் 2011, டிசம்பரில் கைது செய்யப் பட்டனர்.
இந்திரா பிஷ்னோய் கடந்த ஆண்டு ஜூனில் கைது செய்யப்பட்டார்.- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT