Published : 13 May 2018 10:02 AM
Last Updated : 13 May 2018 10:02 AM
கர்நாடக தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று தன் மனைவி, மகன், மருமகள், பேரப்பிள்ளைகளுடன் வாக்களித்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர் தேர்தலில் மஜத வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மஜத, காங்கிரஸ், பாஜகவுடன் நேருக்கு நேர் மோதுகிறது. இதில் வெற்றிப்பெற வேண்டி, தேவகவுடா நேற்று காலை ஹாசனில் உள்ள தனது இல்லத்தில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார். பின்னர் மனைவி சென்னம்மா, மகன் ரேவண்ணா, மருமகள், பேரப்பிள்ளைகளுடன் ஹொளேநரசிப்புராவில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்.
தேவகவுடா கூறுகையில், “நாங்கள் முழு பலத்தையும் பயன்படுத்தி, பிரச்சாரம் செய்திருக்கிறோம். மக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என நம்புகிறேன். எனவே இந்த தேர்தலில் மஜத வென்று, ஆட்சி அமைக்கும்” என்றார். அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா, “ இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மீண்டும் கடும் வறட்சி ஏற்படும். கர்நாடகா மாபெரும் சீரழிவை சந்திக்கும். விவசாயிகள் கஷ்டப்படுவார்கள். மஜத ஆட்சியில் மழை கொட்டும். விவசாயிகளின் ஆதரவைப் பெற்ற எங்கள் தலைவர்களுக்கு நீர் ராசி உண்டு. எனவே மக்கள் மஜதவை வெற்றி வைக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT