Published : 13 May 2018 09:40 AM
Last Updated : 13 May 2018 09:40 AM
பிரதமர் மோடி 2 நாட்கள் நேபாள பயணத்தை நிறைவு செய்து நேற்று டெல்லி திரும்பினார்.
பிரதமர் மோடி நேற்று முன்தினம் நேபாளத்தின் ஜானக்பூருக்கு சென்றார். அந்த நாட்டு பிரதமர் சர்மா ஒளி அவரை வரவேற்றார். பின்னர் அங்குள்ள ஜானகி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் மோடி பங்கேற்றார். பின்னர் நேபாள தலைநகர் காத்மாண்டு திரும்பிய அவர், பிரதமர் சர்மா ஒளி, அதிபர் பிந்தியா தேவியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார்.
இரண்டாவது நாளான நேற்று பிரதமர் மோடி நேபாளத்தின் முஸ்தாங் மாவட்டத்தில் இமய மலையில் அமைந்துள்ள முக்திநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். பின்னர் காத்மாண்டு புறநகர்ப் பகுதியில் உள்ள பசுபதிநாதர் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். முன்னதாக நேபாள முன்னாள் பிரதமர் பிரசண்டா, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள், மோடியை சந்தித்துப் பேசினர். தனது 2 நாட்கள் பயணத்தை நிறைவு செய்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி திரும்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT