Published : 21 Aug 2014 02:04 PM
Last Updated : 21 Aug 2014 02:04 PM
பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவது குறித்து, டெல்லியில், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த ஜேட்லி: "எல்லையில் எப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுகிறதோ அப்போதெல்லாம் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதையும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியதையும் கண்டித்து இந்தியா - பாக் செயலர்கள் தரப்பில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT