Published : 21 Aug 2014 02:04 PM
Last Updated : 21 Aug 2014 02:04 PM

பாக். அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது: அருண் ஜேட்லி

பாகிஸ்தான் அத்துமீறல்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருவதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறுவது குறித்து, டெல்லியில், பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஜேட்லி: "எல்லையில் எப்போதெல்லாம் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுகிறதோ அப்போதெல்லாம் இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

எல்லையில் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறுவதையும், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தியதையும் கண்டித்து இந்தியா - பாக் செயலர்கள் தரப்பில் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை இந்தியா ரத்து செய்தது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x