

அமலாக்கப் பிரிவு தொடர்ந் துள்ள வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக் கள் மீதான தீர்ப்பு வரும் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு உரிமம் வழக்கு தொடர்பாக, சட்ட விரோத பணப்புழக்கத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கப் பிரிவு சார்பில் தனியாக வழக்கு தொடரப்பட்டது.
இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, தயாளு அம்மாள், அமிர்தம், கலைஞர் ‘டிவி’ முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 10 பேர் மீதும், கலைஞர் ‘டிவி’, ஸ்வான் டெலிகாம், டிபி குழும நிறுவனம் உள்ளிட்ட ஒன்பது நிறுவனங்கள் மீதும் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதால், ஜாமீன் கோரி குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் மனு தாக்கல் செய்திருந்தனர். வயோ திகம் காரணமாக வழக்கில் இருந்தே விடுவிக்க வேண்டும் என்று தயாளு அம்மாள் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுக் கள் மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி இம்மனுக்கள் மீது புதன்கிழமை தீர்ப்பு வழங்குவதாக இருந்தது. இந்நிலையில், தீர்ப்பு நிறைய பக்கங்களுக்கு இருப்பதால், இன்னும் தயாராகவில்லை என்று கூறி, வரும் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.