Published : 31 May 2018 10:07 AM
Last Updated : 31 May 2018 10:07 AM
உத்தரப் பிரதேச முதல்வராக இருந்தபோது தனக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி நேற்று காலி செய்தார்.
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர்களாக பதவி வகித்த அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோருக்கு அந்தந்த காலங்களில் வெவ்வேறு பகுதிகளில் அரசு பங்களாக்கள் ஒதுக்கப்பட்டன. முதல்வர் பதவியிலிருந்து விலகிய பிறகும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை அவர்கள் காலி செய்யவில்லை. இது தொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்கள் இருவரையும் உடனடியாக அரசு பங்களாக்களை காலி செய்ய உத்தரவிட்டது. இந்நிலையில், அரசு பங்களாவை மாயாவதி நேற்று காலி செய்தார். எனினும், அவருக்கு ஒதுக்கப்பட்ட மற்றொரு அரசு பங்களாவை அவர் இன்னும் காலி செய்யவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT