Last Updated : 11 May, 2018 08:22 AM

 

Published : 11 May 2018 08:22 AM
Last Updated : 11 May 2018 08:22 AM

காங்கிரஸுக்கு எதிரான மனு தள்ளுபடி

கர்நாடக தேர்தல் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் சார்பில் கடந்த மாதம் 27-ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், இஸ்லாமிய மதத்தினரையும், கிறிஸ்தவ மதத்தினரையும் கவரும் வகையில் சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருந்ததாக தெரிகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ராஷ்ட்ரீய இந்து சேனா அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள் கூறியதாவது:

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டாலே, அதுதொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடாது. சிறுபான்மை சமூகத்தினரின் முன்னேற்றத்துக்காக உறுதியளிப்பதை, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதாக எடுத்துக் கொள்ள முடியாது. வேண்டுமானால், தேர்தல் முடிந்த பிறகு இதே விவகாரத்தை மனுதாரர் அணுகலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x