Published : 24 May 2018 08:39 AM
Last Updated : 24 May 2018 08:39 AM
மகாராஷ்டிர மாநிலம் கல்மேஷ்வர் நகர காவல் நிலைய அதிகாரி சந்திரசேகர் பகதூர் கூறியதாவது:
நாக்பூர் அருகில் தபேவாடா கிராமத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சொந்தமான பண்ணை உள்ளது. இங்கு மஞ்சள் உற்பத்திக்க்கான ‘மனாஸ் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ்’ உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை தண்ணீர் பாய்லரில் மஞ்சளை பதப்படுத்தும் பணியில் பிரதீப் ஸ்ரீராம் (45) உள்ளிட்ட 3 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென பாய்லர் வெடித்தது. மூவரும் தப்பி ஓடியபோது பிரதீப் ஸ்ரீராம் தவறி விழுந்து தலையில் காயம் அடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீப் ஸ்ரீராம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவ்வாறு சந்திரசேகர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT