Published : 01 May 2018 08:26 AM
Last Updated : 01 May 2018 08:26 AM
சாரதா நிதி நிறுவனம் முதலீட்டாளர்களின் பல கோடி முதலீட்டை திருப்பித் தரவில்லை என புகார் எழுந்தது. இதையடுத்து சிபிஐயும் அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்தன. இந்த வழக்கில், சாரதா நிதி நிறுவனத்துக்கு வழக்கறிஞராக பணியாற்றிய நளினி ரூ.1 கோடி கட்டணம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு நளினிக்கு கடந்த 2016-ல் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அந்த சம்மனுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை நீக்கக் கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், நளினியின் சம்மனுக்கான தடையை நீக்கியது. இதையடுத்து, மே 7-ம் தேதி கொல்கத்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு நளினிக்கு அமலாக்கத் துறை நேற்று சம்மன் அனுப்பி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT