Published : 07 Jun 2024 06:13 AM
Last Updated : 07 Jun 2024 06:13 AM

இடைத்தேர்தலில் வென்ற ஹரியாணா முதல்வர் நயாப் சைனி எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார்

சண்டிகர்: ஹரியாணா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி நேற்றுபாஜக எம்எல்ஏவாக பதவியேற்றார். அவருக்கு அவைத்தலைவர் கியான் சந்த் குப்தா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

கர்னால் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் முதல்வர் நயாப் சிங் சைனி தனது முக்கிய போட்டியாளரான காங்கிரஸின் தர்லோச்சன் சிங்கை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

கர்னால் சட்டப்பேரவைத் இடைத்தேர்தலுடன், மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில், மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருஷேத்திரா எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்வராகப் பதவியேற்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x