Published : 20 Apr 2018 08:28 AM
Last Updated : 20 Apr 2018 08:28 AM

சாமியார் மரணம்: 3 போலீஸார் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாதுகாப்பு மிகுந்த ராம ஜென்மபூமி வளாகத்தில் காவல் நிலையம் உள்ளது. மத்தியபிரதேசத்தை சேர்ந்த ராம்தாஸ் தியாகி என்ற சாமியார், சில தினங்களுக்கு முன்பு இங்குள்ள ஹனுமன் கோயிலுக்குச் சென்றிருந்தார். அப்போது அவரது உடைமைகள் திருட்டுப் போயின. இது தொடர்பாக, அயோத்தி ராம ஜென்மபூமி வளாகத்தில் உள்ள காவல் நிலையத்தில் ராம்தாஸ் புகார் அளித்துள்ளார். போலீஸார் வழக்குப் பதிவு செய்ய மறுத்து குற்றவாளியை தப்பிக்க விட்டதாக நேற்று முன்தினம் குற்றம் சாட்டிய ராம்தாஸ், காவல் நிலையத்திலேயே தன் மீது தீ வைத்துக்கொண்டார். சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இது தொடர்பாக காவல் நிலைய தலைமை அதிகாரி உட்பட 3 போலீஸாரை பைசாபாத் மாவட்ட காவல் துறை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x