Published : 16 Apr 2018 08:13 AM
Last Updated : 16 Apr 2018 08:13 AM
காஷ்மீரின் கதுவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 4 போலீஸாரில் ஒருவர் தீபக் கஜுரியா (28). இவருக்கும் முதுநிலை பட்டம் பெற்றுள்ள ரேணு சர்மா (24) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 7-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. வரும் 26-ம் தேதி இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட தீபக் கஜுரியா, கதுவா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனால் ரேணு சர்மாவின் திருமணம் கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து ரேணு கூறியதாவது:
என் எதிர்காலம் குறித்து முடிவெடுப்பதற்கு முன்னர், ஒரே ஒரு முறை சிறையில் தீபக்கை சந்தித்து, சிறுமி பலாத்காரத்தில் தொடர்பு இருக்கிறதா, இல்லையா என்று கேட்க நினைக்கிறேன். அவர் என்னிடம் உண்மையாக இருப்பார். இந்தக் குற்றத்தில் தொடர்பு இருப்பது உண்மைதான் என்று அவர் கூறினால், வேறு மாப்பிள்ளை பார்க்கும்படி என் பெற்றோரிடம் கூறுவேன். தொடர்பு இல்லை என்று அவர் கூறினால், எவ்வளவு காலமானாலும் அவருக்காகக் காத்திருப்பேன்.
ஆனால், சிறையில் தீபக்கை சந்திக்க என்னை அனுமதிக்க மறுக்கின்றனர். ஒரு குழந்தையை பலாத்காரம் செய்து கொல்கிற அளவுக்கு தீபக் கஜுரியா நடந்து கொண்டிருப்பார் என்று நான் நம்பவில்லை. .
அதேநேரத்தில் உண்மை எதுவென்று எனக்குத் தெரியவில்லை. சிபிஐ விசாரணைக்குப் பிறகுதான் தெரியவரும்.
இவ்வாறு ரேணு சர்மா கூறினார்.
போலீஸ் துறையில் 4 ஆண்டுகளுக்கு முன்னர்தான் தீபக் கஜுரியா சேர்ந்துள்ளார். அதன்பிறகு ஹிராநகர் போலீஸ் நிலையத்தில் (சிறுமி பலாத்கார சம்பவம் நடந்த கதுவா எல்லைக்குட்பட்டது) சிறப்பு போலீஸ் அதிகாரியாக தீபக் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT