Published : 15 Apr 2018 10:13 AM
Last Updated : 15 Apr 2018 10:13 AM
உத்தர பிரதேசத்தில் 17 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பெண் ஒருவரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் உள்ள பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர். இவரும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பலாத்காரம் செய்ததாக 17 வயது இளம் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், எம்எல்ஏவின் சகோதரர் அனில் சிங்கை போலீஸார் கைது செய்தனர். எனினும், இந்த வழக்கில் போலீஸார் மெத்தனமாக நடந்து கொள்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, இவ்வழக்கு சிபிஐ வசம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், எம்எல்ஏ குல்தீப் சிங்கை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக எம்எல்ஏ வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக சாஷி சிங் என்ற பெண்ணை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT