Published : 27 Apr 2018 08:41 AM
Last Updated : 27 Apr 2018 08:41 AM
பிஹாரில் 2015 பிப்ரவரியில் ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி அரசு பதவியேற்றது. ஆனால், 2017 ஜூலையில் இந்த கூட்டணி உடைந்தது. பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான நிதிஷ் குமார், பாஜகவுடன் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தார். அப்போது நிதிஷ் குமாருக்கு எதிராக ஐஜத மூத்த தலைவர் சரத் யாதவ் தனி அணியாக செயல்பட்டார். இந்நிலையில் சரத் யாதவின் ஆதரவாளர்கள் லோக் தந்திரிக் ஜனதா தளம் என்று பெயரில் நேற்று புதிய கட்சியைத் தொடங்கினர்.
ஐஜத கட்சிக்கு சரத் யாதவ் உரிமை கோரியுள்ள வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அவர் புதிய கட்சியில் இணையவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT