கேஜ்ரிவாலின் ஜாமீன் நீட்டிப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

கேஜ்ரிவால் | கோப்புப்படம்
கேஜ்ரிவால் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீன் நீட்டிப்பு கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.

தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் அவருக்கு ஜுன் 1-ம் தேதி வரை உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி இருந்தது. இந்த சூழலில் அதனை நீட்டிக்க கோரி கேஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமீனை நீட்டிக்கும்படி அதில் கோரியிருந்தார்.

திங்கள்கிழமை அன்று அவரது மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உச்ச நீதிமன்றம் மறுத்தது. மேலும், இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பார்வைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தது. இந்த சூழலில்தான் அவரது மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கடந்த 10-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in