Published : 03 Apr 2018 08:19 AM
Last Updated : 03 Apr 2018 08:19 AM

ரூ.1.4 கோடி அரசு நிதி முறைகேடு: டீஸ்டா செடல்வாட் மீது போலீஸார் வழக்கு பதிவு

மத்திய அரசின் ரூ.1.4 கோடி நிதியை முறைகேடு செய்த புகாரின்பேரில் சமூக சேவகி டீஸ்டா செடல்வாட் மீது அகமதாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் சமூகசேவகி டீஸ்டா செடல்வாட் ,சப்ரங் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை 2010-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டுவரை தொண்டு நிறுவனத்துக்கு கல்விக்காக அளித்த ரூ.1.4 கோடியை டீஸ்டா செடல்வாட்டும் அறக்கட்டளை நிர்வாகிகளும் முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக டீஸ்டாவுடன் இணைந்து செயல்பட்ட ரயீஸ் கான் பதான் என்பவர் அகமதாபாத் போலீஸில் புகார் அளித்தார். அதில், அரசியலில் மத வெறுப்புணர்வை கலக்க டீஸ்டா முயன்றதாகவும் கல்விக்காக மத்திய அரசு அளித்த நிதியை பாட புத்தகங்கள் மூலம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவும் முறைகேடாகவும் பயன்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் பேரில் டீஸ்டா செடல்வாட் மீதும் அறக்கட்டளை நிர்வாகிகள் மீதும் அகமதாபாத் குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x