Published : 21 May 2024 09:58 AM
Last Updated : 21 May 2024 09:58 AM

வாக்களிக்காதவர்களுக்கு வரியை உயர்த்த வேண்டும்: நடிகர் பரேஷ் ராவல்

பிரபல இந்தி நடிகர் பரேஷ் ராவல். தமிழில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தில் தொழிலதிபராக நடித்திருந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் அகமதாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் நேற்று நடந்த 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மும்பையில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் நடிகர் பரேஷ் ராவல் வாக்களித்தார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது, “அரசு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்று குறை சொல்கிறார்கள். நீங்கள் வாக்களிக்கவில்லை என்றால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.

அரசு பொறுப்பல்ல. வாக்களிக்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கான வரியை அதிகரிக்கலாம்” என்றார். பரேஷ் கடந்த மாதம் சமூக வலைதளப் பக்கத்தில், “மோசமான அரசியல்வாதிகள் பிறப்பதில்லை. வாக்குப்பதிவு நாளில் பிக்னிக் செல்லும் நல்லவர்களால் அவர்கள் உருவாக்கப்படு கிறார்கள்” என்று கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x