Published : 23 Apr 2018 11:56 AM
Last Updated : 23 Apr 2018 11:56 AM
மும்பையில் சிவசேனா மூத்த தலைவர் சச்சின் ஸ்வாந்த் பைக்கில் வந்த இருவரால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து குரால் காவல் நிலைய மூத்த காவல் ஆய்வாளர் உதயகுமார் ராஜேஷிரிகே கூறுகையில்,
‘‘இத்தாக்குதல் சம்பவம் நேற்று இரவு 8 மணி வாக்கில் கண்டிவாலி புறநகர் பகுதியில் நடைபெற்றது. அப்போது மும்பை சிவசேனா தலைவர் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார். அச்சமயம் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இருவர் அவர் மீது இத்துப்பாக்கி தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சாலையில் சவாந்த் கார் சென்றுகொண்டிருந்தபோது கோகுல் நகர் பகுதியின் பிரதான சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. சாலையில் கார் சென்றுகொண்டிருந்தபோது கோகுல் நகர் பகுதியின் பிரதான சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டது. தாக்குதல்காரர்கள் அவர் மீது இத்துப்பாக்கிச் சூட்டை நடத்தினர்.
சவாந்த் அருகே உள்ள அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT