Published : 14 Apr 2018 08:58 AM
Last Updated : 14 Apr 2018 08:58 AM

ஆம்ஆத்மி வழக்கு; மே 17-ம் தேதி விசாரணை

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் ஆதாயம் தரும் பதவி வகிப்பது தொடர்பான விவகாரத்தை தேர்தல் ஆணையம் மே மாதம் 17-ம் தேதி மீண்டும் விசாரிக்கிறது.

டெல்லி சட்டப் பேரவையில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்கள் 20 பேர் இரட்டை ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாகக் கூறி குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று அவர்களைத் தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது. இதை எதிர்த்து எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் தகுதி நீக்கத்துக்கு தடை விதித்தது.

எம்எல்ஏக்களுக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு தரப்படவில்லை என்றும் ஆதாயம் தரும் பதவி விவகாரம் தொடர்பாக தேர்தல் கமிஷன் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, மே மாதம் 17-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x