Published : 01 Apr 2018 10:21 AM
Last Updated : 01 Apr 2018 10:21 AM

உ.பி.யில் அம்பேத்கர் சிலை உடைப்பு

உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரின் திரிவேணிபுரம் பகுதியில் உள்ள ஒரு பூங்காவில் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று காலை சிலையின் கழுத்து துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அலகாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தரம்வீர் கூறும்போது, “உடைக்கப்பட்ட சிலைக்கு பதிலாக வேறு சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலை உடைப்பு தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உ.பி.யின் மீரட் நகரில் இதேபோன்ற சம்பவம் மார்ச் 7-ம் தேதி நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x