Published : 26 Apr 2018 08:31 AM
Last Updated : 26 Apr 2018 08:31 AM

தலைமை நீதிபதிக்கு எதிராக நோட்டீஸ் கொடுத்தது தவறு: காங்கிரஸ் மீது மம்தா குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்தது தவறு என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீசை மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடுவிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அளித்தன. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திய வெங்கய்ய நாயுடு, ‘இது தலைமை நீதிபதியி்ன் மாண்பை குலைக்கும் செயலாகும்’ என்று கூறி கடந்த திங்கட்கிழமை நோட்டீசை தள்ளுபடி செய்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மம்தா கூறும்போது, “உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை பதவி நீக்கம் செய்யக் கோரும் நோட்டீசை காங்கிரஸ் கொடுத்தது தவறு. நோட்டீஸ் கொடுக்க வேண்டாம் என்று சோனியா காந்தியிடமும் ராகுலிடமும் கூறினேன். நோட்டீசை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்பியது. ஆனால், நீதித்துறையில் தலையிட எங்கள் கட்சி விரும்பவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x