Published : 07 May 2024 06:16 AM
Last Updated : 07 May 2024 06:16 AM

‘போயிங் ஸ்டார்லைனர்’-ல் செல்லும் முதல் பெண்: இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் புதிய சாதனை

சுனிதா வில்லியம்ஸ்

புதுடெல்லி: இரண்டு முறை விண்வெளி பயணம் செய்த இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மூன்றாவது முறையாக இன்று விண்ணை நோக்கி தனது புதிய பயணத்தை தொடங்குகிறார்.

’போயிங் ஸ்டார்லைனர்’ எனும் புத்தம் புதிய அதிஉயரக விண்கலத்தில் செல்லும் முதல் பெண் என்ற சாதனையை இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த தீபக், ஸ்லோவேனியாவை சேர்ந்த போனி பாண்ட்யா தம்பதிக்கு மகளாக அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தவர் சுனிதா வில்லியம்ஸ். அமெரிக்க கப்பல் படை விமானியான இவர் கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல்முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டில் இரண்டாம் முறையாக விண்ணைத் தொட்டார். இதுவரை 322 நாட்களை அவர் விண்ணில் கழித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விண்ணில் நெடுநேரம் நடைபயின்ற முதல் பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர். ஏழு முறை விண்வெளியில் நடைபயின்ற சுனிதா மொத்தம் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் நடந்திருக்கிறார்.

சுனிதா வில்லியம்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: புதிய விண்கலத்தில் பயணம் மேற்கொண்டு அதனை சோதனைசெய்து தர சான்றிதழ் அளிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த பயணம் சுவாரசியம் நிறைந்ததாக இருக்கும்’’ என்றார்.

இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மையத்தின் தலைவர் முனைவர் மோகன் கூறுகையில், ‘‘சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்கெனவே இருமுறை தடம் பதித்தவர் சுனிதா. போயிங் ஸ்டார்லைன் விண்கலத்தில் புதிய பயண மேற்கொள்வதன் மூலம் அனைவரும் பெருமை கொள்ள செய்திருக்கிறார். அவரது புதிய பயணம் வெற்றிபெற மனநிறை வாழ்த்துகள்’’ என்று கூறினார்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்று (மே 7) காலை 8.04 மணிக்கு சுனிதா வில்லியம்ஸ் புறப்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x