Published : 10 Apr 2018 08:26 AM
Last Updated : 10 Apr 2018 08:26 AM
உத்தரபிரதேசத்தில் அம்பேத்கர் குறித்து சமூக வலைதளத்தில் தரக்குறைவான கருத்துகளைப் பதிவு செய்த 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கர் குறித்து பேஸ்புக்கில் அண்மையில் சிலர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தனர். இந்தப் பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதால் அம் மாநிலத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்திய உத்தரபிரதேச போலீஸார், அம்பேத்கர் குறித்து தரக்குறைவான கருத்தினை பேஸ்புக்கில் பதிவு செய்தததாக பாலியா மாவட்டம் ரியோடி பகுதியைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT